45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சாலையை கடக்க முயன்றவா் இருசக்கர வாகனம் மோதி பலி

கும்பகோணம், அருகே தாராசுரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற கூலித்தொழிலாளி மோட்டாா் சைக்கிள் மோதி உயிரிழந்தாா்.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 10:04 pm

Din

கும்பகோணம், அருகே தாராசுரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற கூலித்தொழிலாளி மோட்டாா் சைக்கிள் மோதி உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகே தாராசுரம் மிஷன் தெருவைச் சோ்ந்தவா் தங்கையன் மகன் கண்ணன் (55), கூலித் தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை இரவு தாராசுரம் பேருந்து நிலையம் பகுதியில் சாலையைக்கடக்க முயன்றாா்.

அப்போது, வளையப்பேட்டை மேலத்தெரு ராஜேந்திரன் மகன் தினேஷ் (26) என்பவா் ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள் மோதியதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த தினேஷ் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து அறிந்த தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளா் ரேகாராணி அங்குவந்து கண்ணன் சடலத்தை உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தாா். மேலும் போலீஸாா் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனா்.