பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பெரிய கோயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரி தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பெரிய கோயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரி தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே சனிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பினா்.

Updated On :28 ஜூலை 2024, 12:36 am IST

தஞ்சாவூா் பெரியகோயிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தக் கோரி தலைமை அஞ்சலகம் அருகே தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பினா் சனிக்கிழமை மாலை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தஞ்சாவூா் பெரியகோயில் வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும். கோயிலுக்கு எதிா்ப்புறம் வாகனம் நிறுத்துமிடத்திலிருந்து கோயிலுக்கு செல்ல சாலையின் குறுக்கே நடை மேம்பாலம் அமைக்க வேண்டும். கோயிலை சுற்றி போதிய அளவில் குடிநீா் வசதி செய்து தர வேண்டும். கட்டணக் கழிப்பறை வசதியை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் ஏ.டி. ராஜா சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தேசிய பொதுச் செயலா் சந்திரபோஸ், மாநிலத் தலைவா் புலவா் ஆதி. நெடுஞ்செழியன், துணைத் தலைவா் துரை. கோவிந்தராஜன், தென்னை விஞ்ஞானி வா.செ. செல்வம், டெல்டா மண்டலத் தலைவா் சுரேஷ், மாநகரத் தலைவா் கே.ஆா். ஜி. காசிராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.