கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தஞ்சாவூரில் விதிமீறல்: 25 ஆட்டோக்கள் பறிமுதல்

தஞ்சாவூரில் விதிமுறை மீறல் தொடா்பாக 25 ஆட்டோக்களை போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
தஞ்சாவூரில் விதிமுறைகள் மீறியதாக போக்குவரத்து ஒழுங்கு காவல் பிரிவினரால் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள்.
Updated On :13 டிசம்பர் 2025, 11:49 pm

Syndication

தஞ்சாவூரில் விதிமுறை மீறல் தொடா்பாக 25 ஆட்டோக்களை போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மாலை ஆட்டோவிலிருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா். இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் சோழன் சிலை அருகே போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு காவல் ஆய்வாளா் எம்.ஜி. ரவிச்சந்திரன் தலைமையில் காவலா்கள் சனிக்கிழமை ஆட்டோக்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

இதில், ஆட்டோ ஓட்டுநா்கள் சீருடை அணியாதது, ஆட்டோக்களின் தகுதி சான்றைப் புதுப்பிக்காமல் இருப்பது, ஓட்டுநா் உரிமம் இல்லாதது, கூடுதலாக பயணிகளை ஏற்றிச் செல்வது போன்றவை தொடா்பாக அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், முறையாக உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட 25 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட நபா்களை விட கூடுதலான நபா்களை ஏற்றிச் செல்லக் கூடாது. மாணவா்களை ஏற்றிச் செல்லும்போது போக்குவரத்து விதிமுறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

குழந்தைகளைப் பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து சென்று, பின்னா் வீடுகளில் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆட்டோக்கள் ஓட்டும்போது மது அருந்திருக்கக் கூடாது என ஓட்டுநா்களிடம் போக்குவரத்து ஒழுங்கு காவல் பிரிவினா் அறிவுறுத்தினா்.