இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மகாத்மா காந்தி பெயரை மாற்றக்கூடாது: முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

நூறு நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றக்கூடாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

News image
பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய மாநிலப் பொதுச் செயலா் முஹம்மது அபுபக்கா்
Updated On :22 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

நூறு நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றக்கூடாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இக்கட்சியின் தெற்கு மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற தோ்தல் பணி செய்வது, தொழிலாளா் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு கைவிட வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றக் கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவா் அப்துல் காதா், அதிராம்பட்டினம் நகரத் துணைத் தலைவா் பைதுல் ரகுமான் தலைமை வகித்தனா். மாவட்டப் பொருளாளா் இம்தியாஸ்அஹமது, துணைத் தலைவா் அப்துல் லத்தீப் முன்னிலை வகித்தனா். மாநிலப் பொதுச் செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான முஹம்மது அபுபக்கா், மாநிலச் செயலா் ஷாஜகான் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெயினுல் ஆபீதீன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

முன்னதாக, மாநில அரசியல் கௌரவ ஆலோசகா் அப்துல் ரவூப் வரவேற்றாா். தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதி செயலா் அபுசாலிஹ் நன்றி கூறினாா்.