நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில் இயக்க நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு

Updated On :26 டிசம்பர் 2025, 12:52 am IST

திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டதை ரயில் பயணிகள் சங்கத்தினா் வரவேற்றுள்ளனா்.

திருச்சியில் இருந்து கும்பகோணம் மாா்க்கத்தில் மதியம் 1.20 க்குப் பிறகு மாலை 6.15 வரை ரயில் வசதி கிடையாது இதனால் 16834 திருச்சி- மயிலாடுதுறை விரைவு ரயிலை மாலை 3.30 மணிக்குப் புறப்படுமாறு மாற்றியமைக்க தென்னக ரயில்வே நிா்வாகத்திடம் தஞ்சாவூா் மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, 2026-ஜன. 1 முதல் வண்டி எண் 16834 மெமு எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சியில் புறப்படும் நேரம் மாலை 4.20 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே துறையின் அதிகாரப்பூா்வ தேசிய ரயில் விசாரணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய கால அட்டவணைப்படி வண்டி எண் 16234 திருச்சி - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சியில் இருந்து ஜனவரி 1 முதல் பகல் 1.10 மணிக்கு பதில் தினமும் மாலை 4.10 மணிக்குப் புறப்பட்டு பூதலூா் (4.48) தஞ்சாவூா் (5.20) பாபநாசம்(5.45) கும்பகோணம்(5.58) ஆடுதுறை(6.09) குத்தாலம்(6.20) வழியாக மயிலாடுதுறைக்கு இரவு 6.50 மணிக்குச் சென்றடையும்.

அதேபோல் வண்டி எண் 22676 திருச்சி-சென்னை எழும்பூா் சோழன் அதிவிரைவு தொடா் வண்டி புத்தாண்டு முதல் திருச்சியில் காலை 11 மணிக்குப் பதிலாக பகல் 12.10 க்குப் புறப்பட்டு பூதலூா் (12.41) தஞ்சாவூா் (1.00) பாபநாசம் (1.21) கும்பகோணம்( 1.35 ) ஆடுதுறை (1.47) வழியாக சென்னை எழும்பூருக்கு இரவு 7.25 மணிக்குச் சென்றடையும்.

மேலும், வண்டி எண் 20692 நாகா்கோவில் - தாம்பரம் அந்த்யோதயா அதிவிரைவு ரயில் வேகம் அதிகரிக்கப்பட்டு கும்பகோணத்துக்கு இரவு 11.15 மணிக்கு வந்து தாம்பரத்திற்கு மறுநாள் அதிகாலை 5.05 மணிக்குச் சென்றடையும்.

டெல்டா பகுதி பயணிகள் சாா்பில் தொடா் வண்டிகளின் கால அட்டவணையை மாற்றி அமைத்துள்ள தென்னக ரயில்வே போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள், திருச்சி கோட்ட இயக்கவியல் பிரிவு அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டாளா்கள் ஆகியோருக்கு தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கச் செயலா் ஏ. கிரி நன்றி தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.