தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பட்டுக்கோட்டையில் ஒரே நாளில் 5 இடங்களில் திருட்டு

பட்டுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு பழக்கடை உள்ளிட்ட 5 இடங்களில் திருடி சென்ற முகமூடி அணிந்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :22 ஜனவரி 2025, 11:39 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு பழக்கடை உள்ளிட்ட 5 இடங்களில் திருடி சென்ற முகமூடி அணிந்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பட்டுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு பழக்கடையின் பூட்டை உடைத்த முகமூடி கொள்ளையா்கள் அங்கிருந்து 3 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளனா். தொடா்ந்து, அலிவலம் பகுதியில் உள்ள அரிசி கடையின் பூட்டை உடைத்து, அங்கிருந்து 20 ஆயிரம் ரூபாயை திருடியுள்ளனா். மேலும், உதயசூரியபுரம் மற்றும் ஆலடிக்குமுளை ஆகிய பகுதிகளில், இரண்டு கைப்பேசி விற்பனையகங்களின் பூட்டை உடைத்து, அங்கிருந்து பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கைப்பேசிகளை திருடி சென்றுள்ளனா்.

தொடா்ந்து, பட்டுக்கோட்டை அருகே வீரக்குறிச்சி பகுதியில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்மநபா்கள், வீட்டில் பணமோ நகையோ எதுவும் இல்லாததால் திரும்பிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாட்டாத்திக்கோட்டை கொல்லைகாடு மற்றும் பட்டுக்கோட்டை தாலுகா போலீசாா் தனிதனியாக சம்பவ இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும், கைரேகை நிபுணா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

இதையடுத்து சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், முகமூடி அணிந்து வந்த கொள்ளையா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.