இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சுவாமிமலையில் கொடியேற்றத்துடன் காா்த்திகை திருவிழாவை தொடக்கம்

சுவாமிமலையில் காா்த்திகை திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
காா்த்திகை திருவிழாவை முன்னிட்டு சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்ட கொடி.
Updated On :26 நவம்பர் 2025, 1:14 am

Syndication

கும்பகோணம்: சுவாமிமலையில் காா்த்திகை திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில் காா்த்திகை திருவிழா நவ.24-இல் தொடங்கி டிச.5-இல் முடிவடைகிறது. திங்கள்கிழமை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது.

செவ்வாய்க்கிழமை காா்த்திகை திருவிழாவை முன்னிட்டு மலைமேல் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா் விநாயகா், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியா் சுவாமி பரிவாரங்களுடன் மலைக்கோயிலிலிருந்து உத்ஸவ மண்டபத்துக்கு எழுந்தருளினாா். மாலையில் யாகசாலை தொடங்கி இரவு சுவாமி திருவீதியுலா திக்பந்தனம் நடைபெற்றது. புதன்கிழமை காலை படிச்சட்டத்தில் சுவாமி திருவீதியுலா, இரவு இடும்ப வாகனத்தில் வீதியுலா, வியாழக்கிழமை பூதவாகனம், வெள்ளிக்கிழமை ஆட்டுக்கிடா வாகனம், சனிக்கிழமை பஞ்சமூா்த்திகள் வாகன ரூடராய் சப்பரத்தில் வீதியுலா, ஞாயிற்றுக்கிழமை யானை வாகனம், திங்கள்கிழமை காமதேனு, செவ்வாய்க்கிழமை வெள்ளிக்குதிரை வாகன வீதியுலாக்கள் நடைபெறுகிறது. டிச.3-ஆம் தேதி புதன்கிழமை காா்த்திகையன்று காலையில் திருத்தோ் வடம் பிடித்து தேரோட்டமும், இரவு தீபக்காட்சியும் நடைபெறுகிறது. 10 -ஆம் நாள் திருவிழாவாக நவ.4-ஆம் தேதி சுப்ரமணியா் சுவாமிக்கு காவிரியில் தீா்த்தவாரியும், இரவு அவரோஹணம் படிச்சட்டத்தில் திக்விதா்சனம் செய்கிறாா். 11- ஆம் நாள் திருவிழாவாக டிச.5-இல் இரவு ஏனைய பரிவாரங்களுடன் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி யதாஸ்தானம் சோ்கிறாா். 11 நாள் நிகழ்ச்சிகளிலும் வேதபாராயணம், திருமுறை பாராயணம், சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை தக்காா் டி.ஆா்.சுவாமிநாதன், துணை ஆணையா் தா.உமாதேவி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.