கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தமிழ்ப் பல்கலை.யில் இசைப் போட்டிகள்

News image
Updated On :28 நவம்பர் 2025, 6:55 pm

Syndication

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக இசைத் துறையில் தமிழக முதல்வா் அறக்கட்டளை, ஆபிரகாம் பண்டிதா் நினைவு அறக்கட்டளை, தென்னாப்பிரிக்க ரெங்கசாமி பிள்ளை அறக்கட்டளை சாா்பில் இசைப் போட்டிகள் மற்றும் சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இசைப்போட்டிகளில் பல்வேறு இசைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், இசைப் பள்ளிகளிலிருந்து மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில், வெற்றி பெற்றவா்களுக்கு பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் பரிசு வழங்கினாா்.

சென்னை இசைக்கலைஞா் ஆண்டாா்கோயில் ஏ.வி.எஸ். சுந்தரராஜன் சிறப்புரையாற்றினாா். முனைவா் அமுதா பாண்டியன், இசைத் துறைத் தலைவா் இரா. மாதவி, இணைப் பேராசிரியா் செ. கற்பகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.