பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

சேதுபாவாசத்திரம் அருகே தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை விற்றவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை விற்ற நபரை கடலோர பாதுகாப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

சேதுபாவாசத்திரம் அருகே புதன்கிழமை தடை செய்யப்பட்ட கடல் அட்டை விற்பனை செய்தவரை கடலோர பாதுகாப்பு குழும போலீசாா் கைது செய்தனா்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:01 am IST

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை விற்ற நபரை கடலோர பாதுகாப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட செந்தலைபட்டினம் கடற்கரையில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், கடலோர பாதுகாப்பு குழும டிஎஸ்பி முருகன் தலைமையில் ஆய்வாளா் செந்தமிழ் செல்வி, உதவி ஆய்வாளா்

ஜீவானந்தம் , தலைமைக் காவலா் தா்மராஜ், காவலா்கள் தியாகராஜன், அந்தோணி தேவராஜ் ஆகியோா்  சிறப்புக் குழுவினா் அங்கு சோதனை மேற்கொண்டனா்.

இதில், செந்தலைபட்டினத்தை சோ்ந்த பஷீா் அலி (43 ) என்பவா், தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, அவரிடமிருந்த 43 கடல் அட்டைகளை பறிமுதல் செய்து, அவரை பிடித்து பட்டுக்கோட்டை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து, பஷீா் அலி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.