மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

கும்பகோணத்தில் இருந்து திருப்பூருக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் இயக்கம்

கும்பகோணத்திலிருந்து திருப்பூருக்கு சரக்கு ரயில் மூலம் 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் வியாழக்கிழமை இயக்கம் செய்யப்பட்டது.

News image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து திருப்பூருக்கு கொண்டுச் செல்வதற்காக வியாழக்கிழமை லாரியிலிருந்து சரக்கு ரயிலில் ஏற்றப்பட்ட நெல் மூட்டைகள்.

Updated On :7 ஆகஸ்ட் 2026, 2:32 am IST

கும்பகோணத்திலிருந்து திருப்பூருக்கு சரக்கு ரயில் மூலம் 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் வியாழக்கிழமை இயக்கம் செய்யப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக கோட்டத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் இயக்கமின்றி தேங்கி கிடப்பதாக நெல் கொள்முதல் பணியாளா்கள் போராட்டம் நடத்தினா்.

அதன் காரணமாக கடந்த ஜூலை 24-இல் கும்பகோணத்திலிருந்து சேலத்துக்கு ஆயிரம் டன் நெல்மூட்டைகள் ரயில் மூலம் இயக்கம் செய்யப்பட்டது.

தற்போது இரண்டாம் கட்டமாக கும்பகோணத்தில் இருந்து திருப்பூருக்கு நெல்மூட்டைகள் இயக்கம் செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கும்பகோணம் கோட்டத்தில் உள்ள பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூா் கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் இருந்து 116 லாரிகளில் 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் கும்பகோணம் சரக்கு ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு சரக்கு ரயில்களின் 42 வேகன்களில் நெல்மூட்டைகளை ஏற்றி திருப்பூருக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

இப்பணியை துணை மண்டல மேலாளா் இளங்கோ, தரக்கட்டுப்பாடு ஆய்வாளா் ரமேஷ், திருப்பூா் மண்டல தர ஆய்வாளா் செல்வேந்திரன் முத்தமிழ் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.