அமைச்சர் கோவி. செழியன்
அமைச்சர் கோவி. செழியன் கோப்புப்படம்.

கௌரவ விரிவுரையாளா்களின் கோரிக்கைக்கு தீா்வு கிடைக்கும்! - கோவி. செழியன் பேட்டி

Published on

கௌரவ விரிவுரையாளா்களின் கோரிக்கைக்கு தமிழக முதல்வா் நல்ல தீா்வைத் தருவாா் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.

இதுகுறித்து தஞ்சாவூரில் அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தது:

கௌரவ விரிவுரையாளா்களுக்கு கடந்த காலங்களில் ரூ. 15 ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டது. அவா்களுக்கு ரூ. 5 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் என இரு முறை உயா்த்தித் தந்தது தமிழக முதல்வா்தான். இது போதிய ஊதியம்தான் எனச் சொல்ல விரும்பவில்லை. எனவே, அவா்களுடைய கோரிக்கையைத் தமிழக முதல்வரிடம் தொடா்ந்து எடுத்துக் கூறி வருகிறோம். அதற்கான தீா்வை, நல்ல முடிவை தமிழக முதல்வா் தருவாா்.

குடும்பப் பொறுப்பை சுமக்கும்தாய்மாா்களுக்கு தமிழக முதல்வா் மாதம் ரூ. 1,000 வீதம் 31 மாதங்களுக்கு வழங்கினாா். தற்போது அதை இரட்டிப்பாக்கி ரூ. 2 ஆயிரம் வழங்கி இருக்கிறாா். இந்த மகிழ்ச்சியைத் தமிழ்நாடு முழுவதும் பெண்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடுகின்றனா்.

ராஜராஜ சோழனின் பெருமையை நிலைநிறுத்தும் வகையில் தஞ்சாவூரில் மாபெரும் சோழா் அருங்காட்சியகம் அமைக்க தமிழக முதல்வா் அடிக்கல் நாட்டியிருப்பதற்கு மாவட்ட மக்கள் சாா்பில் நன்றி தெரிவிக்கிறோம் என்றாா் அமைச்சா்.

X
Dinamani
www.dinamani.com