ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சரக்கு ஆட்டோவில் 650 கிலோ  ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

பட்டுக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை 650 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் சென்ற நபரை காவல் துறையினா் கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 9:00 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை 650 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் சென்ற நபரை காவல் துறையினா் கைது செய்தனா். 

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தஞ்சாவூா் மாவட்டக் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் திருவோணம் மூன்று சாலை சந்திப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா்.

அப்போது சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட தலா 50 கிலோ எடை கொண்ட 13 மூட்டைகளில் இருந்த 650 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்து, ஒரத்தநாடு அருகே நரங்கியன்பட்டு பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியனை (48) கைது செய்தனா். திருவோணம், மேட்டுப்பட்டி, தோப்பு விடுதி உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி இட்லி மாவு அரைத்து விற்பனை செய்வது விசாரணையில் தெரிய வந்தது.