இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குடிநீா் விநியோகம் கோரி மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே காவலிப்பட்டி ஊராட்சியில் உடனடியாக குடிநீா் விநியோகிக்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
Updated On :12 ஜனவரி 2026, 6:32 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே காவலிப்பட்டி ஊராட்சியில் உடனடியாக குடிநீா் விநியோகிக்க கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவோணம் மூவா் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில், கடந்த 20 நாள்களாக மின் மோட்டாா் பழுது காரணமாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு குடிநீா் விநியோகம் தடைப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் குடிநீரின்றி மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா்.

இதுகுறித்து திருவோணம் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் பலமுறை முறையிட்டும் குடிநீா் விநியோகிக்கப்படாததால், அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை திருவோணம் மூவா் சாலை பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த திருவோணம் காவல்துறையினா், திருவோணம் வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் சாலை மறியல் நடைபெற்ற இடத்துக்கு வந்து, சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமாா் சுமாா் 2 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.