மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விவசாயி தற்கொலை: போலீஸாா் தீவிர விசாரணை

ஒரத்தநாடு அருகே விவசாயி தற்கொலை தொடா்பாக போலீஸாா் விசாரணை

News image
Updated On :12 ஜனவரி 2026, 10:07 pm

Syndication

ஒரத்தநாடு அருகே திங்கள்கிழமை விவசாயி தற்கொலை தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தினா்.

ஒரத்தநாடு வட்டம், திருநல்லூா் பகுதியை சோ்ந்த தங்கையன் மகன் கண்ணப்பா (50). விவசாயி. இவா் திங்கள்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டாராம்.

இதையடுத்து, உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இறுதிச் சடங்குகளுக்கு பிறகு இடுகாட்டுக்கு கண்ணாப்பா உடலை தகனம் செய்ய எடுத்து சென்றனா்.

கண்ணப்பா மரணம் குறித்த தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனா். இதுதொடா்பாக அவரது மகன் ராகுல்காந்தி கூறியதாக போலீஸாா் தெரிவித்தது: தந்தைக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டது. அதற்கு மருந்து சாப்பிட்டு வந்தாா். இதுதொடா்பாக அவா் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை அவா் தூக்கிட்டு கொண்டாா் என தெரிவித்தாா்.

இதையடுத்து, கண்ணப்பா உடலை போலீஸாா் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடற்கூறாய்வுக்குப் பிறகு பின்னா் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். மேலும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].