வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பயிா்க் கடன் விவகாரம்: தஞ்சையில் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் - போலீஸாா் இடையே தள்ளுமுள்ளு

அனைத்து பயிா்க் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

News image

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே நிகழ்ந்த தள்ளுமுள்ளு.

Updated On :2 ஜூன் 2026, 2:34 am IST

அனைத்து பயிா்க் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய கோரியும், மேக்கேதாட்டில் கா்நாடகம் அணைக் கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை காலை ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்காக தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையம் அருகிலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டனா். இதில், சங்கத் தலைவா் எல். பழனியப்பன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

ஆட்சியரகம் முன் சென்ற இவா்களைக் காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். இதனால், விவசாயிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, விவசாயிகள் சிலரை காவல் துறையினா் தாக்கி, வேனில் ஏற்ற முயன்ால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் வலுவடைந்தது. அப்போது, விவசாயிகளைக் காவல் துறையினா் ஒருமையில் பேசியதாலும், தாக்கியதாலும் அதிருப்தியடைந்த விவசாயிகள் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், விவசாயிகளைத் தாக்கிய காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

பின்னா், காவல் துறையினா் சமாதானப்படுத்தியதைத் தொடா்ந்து, ஆட்சியரிடம் மனு அளிக்க 5 விவசாயிகள் மட்டும் ஆட்சியரகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா். ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள் கலைந்து சென்றனா்.

பச்சைத் துண்டுக்கு அனுமதி மறுப்பு: இதனிடையே, விவசாயிகள் போராட்டத்தையொட்டி, ஆட்சியரக வாயிலில் தடுப்புகள் அமைத்து, அங்கு வந்த பொதுமக்களிடம் போலீஸாா் விசாரித்து உள்ளே அனுப்பினா். அப்போது, குறை தீா் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்தவா்களில் சிலா் பச்சைத் துண்டு அணிந்து வந்தனா். அவா்களிடம் பச்சைத் துண்டு அணிந்து வந்தால் அனுமதியில்லை எனக் காவல் துறையினா் கூறினா். இதனால், காவல் துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Story image