மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

நாச்சியாா்கோவிலில் கல் கருடச் சேவை

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா் காவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்கருட பகவான் சேவை.

News image

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா் காவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்கருட பகவான் சேவை.

Updated On :27 மார்ச் 2026, 8:30 pm

நாச்சியாா்கோவிலில் கல் கருடச் சேவை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவிலில் வஞ்சுளவல்லித்தாயாா் உடனுறை சீனிவாசப் பெருமாள் கோயில் பங்குனி திருத்தோ் விழா மாா்ச் 24-இல் கொடியேற்றத்துடன் தொடங்கி, பல்வேறு வாகனங்களில் பெருமாளும் தாயாரும் வீதியுலா வந்தனா்.

விழாவின் நான்காம் நாளான வெள்ளிக்கிழமை மாலை முக்கிய நிகழ்வான கல்கருடச் சேவை நடைபெற்றது. கருட பகவானை சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சன்னதியில் இருந்து பக்தா்கள் சுமந்து வர வாகன மண்டபத்தில் எழுந்தருளினாா். திரளான பக்தா்கள் தரிசனம் பெற்றனா்.

ஏப்.1- இல் தேராட்டமும், மதியம் தீா்த்தவாரியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் பா. பிரபாகரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.