திருச்சியில் நடைபெற்ற குறைதீர் நாள் முகாமில் பயனாளிகள் 81 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வழங்கினார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் குறைதீர் நாள் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 456 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டன.
தொடர்ந்து, மூளை முடக்குவாதம் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 1 0 பேருக்கு உதவித்தொகை, சக்கர நாற்காலி, திருச்சி, ஸ்ரீரங்கம் வட்டத்தைச் சேர்ந்த 47 பேருக்கு முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ம.சங்கரநாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனுஷுக்கு ஜோடியாகும் நடிகை ப்ரீத்தி முகுந்தன்?

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மேலும் 150 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு: கே.ஜி. அருண்ராஜ்
இதுதான் ஆய்வு! ஆட்டுக்கறி குழம்பில் கறி எங்கே? மாணவர் விடுதியில் ஆட்சியர் கேள்வி!






