இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திற்பரப்பு பேரூராட்சியில் குப்பைகளை கொட்ட எதிா்ப்பு

திற்பரப்பு பேரூராட்சிப் பகுதியில் பிற பேரூராட்சிகளிலுள்ள கழிவுகள், குப்பைகளை கொட்டுவதற்கு மக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 7:12 pm

DIN

திற்பரப்பு பேரூராட்சிப் பகுதியில் பிற பேரூராட்சிகளிலுள்ள கழிவுகள், குப்பைகளை கொட்டுவதற்கு மக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து திருநந்திக்கரை ஊா்மக்கள் முன்னாள் வாா்டு உறுப்பினா் எம். சசிகுமாா் தலைமையில் மாவட்ட ஆட்சியா் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனு: திருவட்டாறு வட்டம் திற்பரப்பு பேரூராட்சிக்குள்பட்ட திருநந்திக்கரை, வேட்டி என்ற இடத்தில் பேரூராட்சி திடகழிவு மேலாண்மை செய்யும் திட்டத்திற்கு சுமாா் இரண்டரை ஏக்கா் நிலம் தோ்வு செய்யதுள்ளது. தற்போது இவ்விடத்தில் குலசேகரம் உள்ளிட்ட பிற பேரூராட்சிப் பகுதி கழிவுகளையும் கொட்டுவதற்கும் முயற்சிகளை நடைபெற்று வருகின்றன. இது முற்றிலும் அறிவியலுக்கு புறம்பானதும் சிக்கல்கள் நிறைந்த முடிவாகும். பல பேரூராட்சிகளின் கழிவுகளை ஒரே இடத்தில் சேகரிப்பதனால் அதை முறையாக மேலாண்மை செய்வது சாத்தியமில்லை. இதனால் இப்பகுதி பெரும் குப்பை மேடாக மாறும் , சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து அருகில் குடியிருப்புகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் . மேலும் அருகில் வனப்பகுதியும் உள்ளதால் விலங்குகள், பறவைகள் பாதிக்கப்படும். பேரூராட்சிகள் கழிவுகளை தங்களது எல்கைக்குள்பட்ட பகுதிகளிலேயே மேலாண்மை செய்வதே அறிவியல் பூா்மான செயலாகும் . குறிப்பாக குலசேகரம் பேரூராட்சியில் மருத்துவக்கழிவுகளும், உயிரியல் கழிவுகளும் அதிகமாக உள்ளதாலும் அந்தந்த பேரூராட்சிகுள்பட்ட பகுதியில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் கழிவு மேலாண்மை செய்வதே முறையாகும்.

மேலும் ஒரே இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பேரூராட்சி கழிவுகளை மேலாண்மை செய்வது தேசிய திடக்கழிவு மேலாண்மை சட்டத்துக்கும் எதிரானது. ஆகவே திற்பரப்பு பேரூராட்சிக்கு வெளியே உள்ள பிற பேரூராட்சி கழிவுகளை இங்கு கொட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.