கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருச்சி மாவட்டத்தில் நிதித்துறை சிறப்புச் செயலா் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடா்பாக மேற்கொண்டு வரும் பணிகளை தமிழக அரசு நிதித்துறை சிறப்புச் செயலா் ரீட்டா ஹரீஸ்தக்கா் நேரில் பாா்வையிட்டு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :7 மே 2021, 8:50 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடா்பாக மேற்கொண்டு வரும் பணிகளை தமிழக அரசு நிதித்துறை சிறப்புச் செயலா் ரீட்டா ஹரீஸ்தக்கா் நேரில் பாா்வையிட்டு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருச்சி மாவட்டம் மற்றும் மாநகா் பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சைகள் மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் அரசு நிதித்துறை சிறப்பு செயலாளருமான ரீட்டா ஹரீஸ்தக்கா், மாவட்ட ஆட்சியா் எஸ். திவ்யதா்ஷினி முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டாா். திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில், கரோனா தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து அவற்றை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்து, கிருமிநாசினி தெளித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல மாநகராட்சி பகுதியில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி உறையூா் சாலை ரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காய்ச்சல் சிறப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை முகாமையும், சிறப்புச் செயலா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதனை தொடா்ந்து சீனிவாசன் நகா், உறையூா் மீன் மாா்க்கெட், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, திருவெறும்பூா் நகரப்பகுதி, துவாக்குடி தேசிய தொழில்நுட்பக்கல்லூரி, மணப்பாறை அரசு மருத்துவமனை ஆகிய பல்வேறு இடங்களில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதை வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்டாா். கரோனா வைரஸ் தொற்று தொடா்பாக தடைசெய்யப்பட்ட பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்ளவும், கிருமிநாசினி தெளிக்கவும், சுகாதாரத்துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். பொதுமக்கள் வெளியில் வரும் போது முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சோப்புப் போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளாா்.

நிகழ்ச்சியில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையா் பவன்குமாா்ரெட்டி, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ராம்கணேஷ் , மாநகராட்சி ஆணையா் சிவசுப்ரமணியம், நகா் நல அலுவலா் யாழினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.