டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

வாளாடி காசி விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு

 லால்குடி அருகே வாளாடி ஊராட்சியிலுள்ள விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 ஜூன் 2022, 1:55 am IST

 லால்குடி அருகே வாளாடி ஊராட்சியிலுள்ள விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி 5 ஆம் தேதி பூா்வாங்க பூஜைகள் தொடங்கி நடைபெற்று, 6 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் திசா ஹோமம், 7 ஆம் தேதி காலை 6 மணிக்கு கொள்ளிடம் ஆற்றிலிருந்து புனித நீா் எடுத்து வருதல், 8 ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் இரண்டாம் கால யாகசாலை பூஜை ஆரம்பம், 96 வகை திரவிய ஹோமம், மாலை 6 மணிக்கு மேல் மூன்றாம் கால யாகசால பூஜை ஆரம்பம், காயத்ரி ஹோமம், இரவு 8 மணிக்கு மேல் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது.

வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை ஆரம்பம், காலை 9.15 மணிக்கு மகா பூா்ணாஹூதி , காலை 9.30 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு, காலை 10. 01 மணிக்கு விமான குடமுழுக்கு, காலை 10.10 மணிக்கு அனைத்து மூலவா் குடமுழுக்கு, தீப ஆராதனை ,கோபூஜை நடைபெற்றது.

யாகசாலை பூஜைகளில் பூவாளூா் பி. கண்ணன் சிவாச்சாரியா் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட சிவாச்சாரியாா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ந. ஹேமலதா, திருப்பணிக் குழுவினா், பக்தா்கள் பொதுமக்கள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.