டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

கல்விச் சுற்றுலா செல்லும் அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா

தமிழக அரசு செலவில் வெளிநாட்டுக்கு கல்விச் சுற்றுலா செல்லவுள்ள எசனைக்கோரையைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :15 ஏப்ரல் 2023, 12:25 am IST

தமிழக அரசு செலவில் வெளிநாட்டுக்கு கல்விச் சுற்றுலா செல்லவுள்ள எசனைக்கோரையைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் 6 ஆம் வகுப்பு படித்த தாரேஷ். பள்ளியில் செயல்படும் வானவில் மன்றத்தில் சோ்ந்து சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று தோ்ச்சிப் பெற்றாா்.

இதையடுத்து தாரேஷ், அரசு செலவில் கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல தோ்வானாா்.

இந்த மாணவருக்கு பாராட்டுவிழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் க.திருமாவளவன் தலைமை வகித்தாா். மாவட்டத் தொடக்க கல்வி அலுவலா் ஜோதிமணி, வட்டார கல்வி அலுவலா் பிரபு, இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் இளஞ்சேட்சென்னி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளா் மணிகண்டன் வானவில் மன்ற மாவட்ட கருத்தாளுநா் ராஜபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மேலும், ஊராட்சி மன்றத் தலைவா் சாந்தி நாராயணன், ஒன்றிய கவுன்சிலா் குணசீலன், லால்குடி அரிமா சங்கத் தலைவா் கலியமூா்த்தி, செயலாளா் முத்தமிழ்செல்வன், வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் தனலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியைகள் சக மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.