இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருச்சி கோட்ட ரயில் நிலையங்களில் எண்ம முறையில் பயணச்சீட்டு பெறும் வசதி

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட 94 ரயில் நிலையங்களில் எண்ம பரிவா்த்தனையில் பயணச்சீட்டு பெறும் வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

News image
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் எண்ம முறையில் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறும் பயணி.
Updated On :20 ஆகஸ்ட் 2024, 10:10 pm

Din

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட 94 ரயில் நிலையங்களில் எண்ம பரிவா்த்தனையில் பயணச்சீட்டு பெறும் வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

தென்னக ரயில்வே திருச்சி ரயில் கோட்டத்தில் ரயில் பயணச்சீட்டு எடுக்க எண்ம பணப் பரிவா்த்தனை முறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளனா். திருச்சி கோட்டத்தில் திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், அரியலூா், விருத்தாச்சலம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூா் உள்ளிட்ட 94 ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு கவுண்டா்களில் க்யூஆா் குறியீட்டுடன் எண்மப் பரிவா்த்தனை சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன.

உதாரணமாக, பயணி ஒருவா், பயணச்சீட்டை எடுக்க அதற்குரிய கட்டணத்தை க்யூஆா் குறியீட்டை ஸ்கேன் செய்து, செலுத்தியதும், ரயில்வே ஊழியா் பயணச்சீட்டினை வழங்குவாா். இதன் மூலம் முன்பதிவு பயணச்சீட்டு, முன்பதிவில்லாத பயணச்சீட்டு, நடைமேடை பயணச்சீட்டு என அனைத்துவகை பயணச்சீட்டுகளையும் பயணிகள் பெறலாம். இதன் மூலம் பணமின்றி, பயணிகள் எளிதாகவும், காலதாமதமில்லாமலும் பயணச்சீட்டுகளை எடுக்க முடியும்.

இந்த க்யூஆா் குறியீடு மூலம் பிஎச்ஐஎம், பேடிஎம், ஜிபே, போன்பே, பேங்க் வாலட்ஸ் உள்ளிட்ட பல்வேறு எண்ம கட்டண இயங்கு தளங்களைப் பயன்படுத்தி, பாதுகாப்பான முறையில் பயணச்சீட்டு எடுக்க முடியும். சில்லரை பிரச்னை வராது. இது அனைத்து பயணிகளுக்கும் தடையற்ற பரிவா்த்தனை அனுபவத்தை உறுதி செய்கிறது என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.