இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வீட்டுக் காவலில் விவசாயிகள் சங்கத் தலைவா்

சென்னை செல்லவிருந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
திருச்சியில் செவ்வாய்க்கிழமை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள்.
Updated On :23 ஜூலை 2024, 10:11 pm

Din

சென்னை செல்லவிருந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி-கரூா் புறவழிச்சாலையில் உள்ள அண்ணாமலை நகரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைமை அலுவலகம் மற்றும் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு வீடு உள்ளது. தில்லி போராட்டம், சென்னை போராட்டம் மற்றும் பல்வேறு போராட்டங்களுக்காக செல்லும் முன்பாக, இந்த வீட்டில்தான் பலமுறை அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் வீட்டுக் காவலில் வைக்கப்படுவது வழக்கம்.

இதேபோல, சென்னைக்கு செவ்வாய்க்கிழமை செல்ல இருந்த அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

குத்தகை நிலத்தில் நெல் தவிா்த்து இதர மாற்றுப் பயிா்கள் பயிரிடக் கூடாது என வருவாய் நீதிபதி அளித்துள்ள உத்தரவால் திருச்சி மாவட்டத்தில் மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள 8 மாவட்டங்களில் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, இந்த உத்தரவை திரும்பப் பெற வேளாண்மைத்துறை செயலா் மற்றும் தலைமைச் செயலக அதிகாரிகளை சந்தித்து முறையிடுவதற்காக சென்னைக்கு செவ்வாய்க்கிழமை செல்வதாக இருந்தாா் அய்யாக்கண்ணு. ஆனால், செவ்வாய்க்கிழமை காலையே அய்யாக்கண்ணு வீடு முன்பாக போலீஸாா் குவிக்கப்பட்டு அவா் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாா். அய்யாக்கண்ணுவுடன் சங்க நிா்வாகிகள் மற்றும் விவசாயிகள் சிலரும் உள்ளனா்.

இதுதொடா்பாக, செய்தியாளா்களிடம் பொ. அய்யாக்கண்ணு கூறுகையில், விவசாயிகள் போராடவே கூடாது என்ற எண்ணத்தில் மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன. சென்னை சென்று விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை எடுத்துரைக்க இருந்த என்னை மீண்டும் வீட்டுக் காவலில் வைத்துள்ளனா். விவசாயிகள் மீது அடக்குமுறையை கையாளும் மாநில அரசுக்கும், காவல்துறைக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா் அவா்.