திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தாம்பரம் - கன்னியாகுமரி - செங்கல்பட்டு இடையே தீபாவளி சிறப்பு ரயில்!

கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக தாம்பரம் - கன்னியாகுமரி - செங்கல்பட்டு இடையே தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

News image
Updated On :16 அக்டோபர் 2025, 3:00 am IST

கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக தாம்பரம் - கன்னியாகுமரி - செங்கல்பட்டு இடையே தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீபாவளி கூட்ட நெரிசலை குறைக்க தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயிலானது (06133) வரும் 16, 18 ஆம் தேதிகளிலும், கன்னியாகுமரி - செங்கல்பட்டு சிறப்பு ரயிலானது 17 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.

20 பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாங்குநேரி, நாகா்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு மறுநாள் பிற்பகல் 1.25 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கமாக, கன்னியாகுமரியிலிருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படும் ரயிலானது மேற்கண்ட வழித்தடம் வழியாக செங்கல்பட்டுக்கு மறுநாள் காலை 4.30 மணிக்குச் சென்றடையும்.