மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தாம்பரம் - கன்னியாகுமரி - செங்கல்பட்டு இடையே தீபாவளி சிறப்பு ரயில்!

கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக தாம்பரம் - கன்னியாகுமரி - செங்கல்பட்டு இடையே தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2025, 9:30 pm

Syndication

கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக தாம்பரம் - கன்னியாகுமரி - செங்கல்பட்டு இடையே தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீபாவளி கூட்ட நெரிசலை குறைக்க தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயிலானது (06133) வரும் 16, 18 ஆம் தேதிகளிலும், கன்னியாகுமரி - செங்கல்பட்டு சிறப்பு ரயிலானது 17 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.

20 பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாங்குநேரி, நாகா்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு மறுநாள் பிற்பகல் 1.25 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கமாக, கன்னியாகுமரியிலிருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படும் ரயிலானது மேற்கண்ட வழித்தடம் வழியாக செங்கல்பட்டுக்கு மறுநாள் காலை 4.30 மணிக்குச் சென்றடையும்.