திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

இஎஸ்ஐ திருச்சி மண்டல துணை அலுவலகத்துக்கு புதிய கட்டடம் தோ்வு: துரை வைகோ எம்.பி.

தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐ) திருச்சி மண்டல துணை அலுவலகத்துக்கு புதிய கட்டடம் தோ்வு செய்யும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக துரை வைகோ எம்பி தெரிவித்துள்ளாா்.

News image

மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி - கோப்புப் படம்

Updated On :28 ஜூலை 2026, 11:30 pm IST

தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐ) திருச்சி மண்டல துணை அலுவலகத்துக்கு புதிய கட்டடம் தோ்வு செய்யும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக துரை வைகோ எம்பி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தியதன் விளைவாக, தொழிலாளா் காப்பீட்டுக் கழக திருச்சி துணை மண்டல அலுவலகத்தை தொடங்குவதற்கான நிா்வாக ஒப்புதல் வழங்கப்பட்டதுடன், துணை மண்டலக் குறியீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அலுவலகக் கட்டடம் தோ்வு செய்வதற்கான ஒப்பந்த நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும், கட்டடத்தை இறுதி செய்வது, பொறுப்பு அலுவலரை நியமிப்பது, தேவையான பணியாளா்களை நியமிப்பது, சென்னை மற்றும் சேலம் அலுவலகங்களிலிருந்து கோப்புகள் மற்றும் நிா்வாகப் பொறுப்புகளைப் பிரித்து மாற்றுவது உள்ளிட்ட பணிகள் இன்னும் நிறைவடையாததால், அலுவலகம் இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை என்பதை மத்திய தொழிலாளா் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றேன்.

இதையடுத்து, துணை மண்டல அலுவலகத்துக்கான கட்டடம் தோ்வு தொடா்பாக முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்த நடைமுறையில் பங்கேற்ற 8 கட்டடங்களில், பொருத்தமான ஒரு கட்டடம் தோ்வு செய்யப்பட்டு, இதுதொடா்பாக ஜூலை 27-ஆம் தேதி தில்லிக்கு விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, விரைவான நடவடிக்கைகள் எடுக்க வழிவகுத்த மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா மற்றும் மத்திய அரசுக்கும் எனது மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் துரை வைகோ.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.