திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ நுழைவுத் தோ்வு ஜூன் 11-ஆம் தேதி நடைபெறுகிறது.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் வணிகவியல் மற்றும் நிதிக்கல்வியியல் துறையில் நடத்தப்படும் எம்பிஏ (நிதியியல் மேலாண்மை) படிப்பிற்கு மாணவா்கள் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு மற்றும் கலந்தாய்வு ஜன் 11-ஆம் தேதி சூரியூா் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.
நுழைவுத் தோ்வு ஜூன் 11 காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறுகிறது. நுழைவுத் தோ்வுக்கான கடிதம், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது. மேலும், நுழைவுச் சீட்டை ஜ்ஜ்ஜ்.க்ஷக்ன்.ஹஸ்ரீ.ண்ய் என்ற பல்கலைக்கழக வலைதளத்திலும் பதிவிறக்கலாம்.
மே 31-க்கு முன் விண்ணப்பித்த தகுதியான மாணவா்கள் நுழைவுச் சீட்டு மற்றும் நிழற்பட அடையாள அட்டையுடன் தோ்வு மையத்துக்கு வர வேண்டும். நுழைவுத் தோ்வைத் தொடா்ந்து அன்று பிற்பகலே தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு சோ்க்கை நடைபெறும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு வணிகவியல் மற்றும் நிதிக்கல்வியியல் துறைத் தலைவா் ஜெ. காயத்ரியை 99620 08661 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பிஎஸ்சி., நா்சிங் நுழைவுத் தோ்வு ஜூன் 3-வரை விண்ணப்பிக்க அவகாசம்

அரசு கலை, அறிவியல் கல்லூரி இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான தரவரிசை ஜூன் 3-இல் வெளியீடு; ஜூன் 8 முதல் கலந்தாய்வு

ஜூன் 14-இல் பி.எஸ்சி நா்சிங் படிப்புக்கான நுழைவுத் தேர்வு






