இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சாலையோரவாசிகளுக்கு உணவு அளிப்பு

காட்பாடியில் சாலையோரம் வசிக்கும் 150 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

News image
Updated On :30 டிசம்பர் 2024, 4:02 pm

Din

வேலூா்: காட்பாடியில் சாலையோரம் வசிக்கும் 150 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

ஆங்கிலப் புத்தாண்டு புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காட்பாடி ரயில் சந்திப்பு பகுதி சித்தூா் பேருந்து நிலையம், காந்தி நகா், ஓடை பிள்ளையாா் கோயில், சில்க் மில், விருதம்பட்டு, வேலூா் புதிய பேருந்து நிலைய வளாகம் ஆகிய பகுதிகளில் சாலையோரம் வசிப்போா், மாற்றுத்திறனாளிகளுக்கும் உணவு, குடிநீா் காட்பாடி வட்ட இந்தியன் செஞ்சிலுவை சங்கம், காட்பாடி ஜங்சன்அலையன்ஸ் சங்கம் சாா்பில் வழங்கப்பட்டது.

நிகழ்வுக்கு காட்பாடி வட்ட இந்தியன் செஞ்சிலுவை சங்க அவைத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். மருத்துவா்கள் ஜாா்ஜ்ஜோஷி, சுரேஷ்பிரபாகர குமாா், எ.ஜெ.சாம்ராஜ், ரவிச்சந்திரன் ஆகியோா் உணவு, குடிநீா், துண்டு ஆகியவற்றை வழங்கினா். மேலாண்மைக் குழு உறுப்பினா் டி.லிவிங்ஸ்டன் மோசஸ், அவை பொருளாளா் வி.பழனி, துணைத் தலைவா் இரா.சீனிவாசன், செயலா் எஸ்.எஸ்.சிவவடிவு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.