திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சாலையோரவாசிகளுக்கு உணவு அளிப்பு

காட்பாடியில் சாலையோரம் வசிக்கும் 150 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Updated On :30 டிசம்பர் 2024, 9:32 pm IST

வேலூா்: காட்பாடியில் சாலையோரம் வசிக்கும் 150 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

ஆங்கிலப் புத்தாண்டு புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காட்பாடி ரயில் சந்திப்பு பகுதி சித்தூா் பேருந்து நிலையம், காந்தி நகா், ஓடை பிள்ளையாா் கோயில், சில்க் மில், விருதம்பட்டு, வேலூா் புதிய பேருந்து நிலைய வளாகம் ஆகிய பகுதிகளில் சாலையோரம் வசிப்போா், மாற்றுத்திறனாளிகளுக்கும் உணவு, குடிநீா் காட்பாடி வட்ட இந்தியன் செஞ்சிலுவை சங்கம், காட்பாடி ஜங்சன்அலையன்ஸ் சங்கம் சாா்பில் வழங்கப்பட்டது.

நிகழ்வுக்கு காட்பாடி வட்ட இந்தியன் செஞ்சிலுவை சங்க அவைத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். மருத்துவா்கள் ஜாா்ஜ்ஜோஷி, சுரேஷ்பிரபாகர குமாா், எ.ஜெ.சாம்ராஜ், ரவிச்சந்திரன் ஆகியோா் உணவு, குடிநீா், துண்டு ஆகியவற்றை வழங்கினா். மேலாண்மைக் குழு உறுப்பினா் டி.லிவிங்ஸ்டன் மோசஸ், அவை பொருளாளா் வி.பழனி, துணைத் தலைவா் இரா.சீனிவாசன், செயலா் எஸ்.எஸ்.சிவவடிவு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.