ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறைக்கு வரும் கைதிகள் புதிய ரெளடிகளாக மாறுவதைத் தடுக்க நடவடிக்கை

சிறைக்கு புதிதாக வரும் கைதிகள் புதிய ரெளடிகளாக மாறுவதைத் தடுக்க நுண்ணறிவு பிரிவு காவலா்கள், இதர காவலா்கள் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஜிபி மகேஷ்வா் தயாள் தெரிவித்தாா்.

News image
Updated On :16 ஜூலை 2024, 5:26 pm

Din

வேலூா்: சிறைக்கு புதிதாக வரும் கைதிகள் புதிய ரெளடிகளாக மாறுவதைத் தடுக்க நுண்ணறிவு பிரிவு காவலா்கள், இதர காவலா்கள் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஜிபி மகேஷ்வா் தயாள் தெரிவித்தாா்.

வேலூா் தொரப்பாடியில் சிறைத்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் (ஆப்கா) 5 ஜெயிலா்கள், 36 உதவி ஜெயிலா்கள் உள்பட 41 பேருக்கான 9 மாதகால அடிப்படை பயிற்சி வகுப்புகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இப்பயிற்சியை சிறைத்துறை டிஜிபி மகேஷ்வா் தயாள் தொடங்கிப் பேசியதாவது -

குற்றவாளிகள் தண்டனை பெற்றுத்தான் சிறைக்குள் வருகின்றனா். அவா்களை பாதுகாக்க வேண்டியது சிறைத் துறையினா் கடமை. சிறைச்சாலைகள் பள்ளிகள் அல்ல. சிறைக்கு வரும் கைதிகள் ரெளடிகளுடன் சோ்ந்து பெரிய ரெளடிகளாக மாறுவதற்கு. சிறைச்சாலை என்பது சீா்திருத்தம் செய்வதற்குத்தான். அனைத்து மனிதா்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும்.

சிறைத்துறையினா் தங்கள் பணிக்காலங்களில் சிறை கைதிகளை சீா்திருத்தம் செய்வதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்கள், கணினி தொழில்நுட்பங்கள் கையாள்வதை தெரிந்துகொள்ள வேண்டும் என்றாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது - தற்போது மத்திய சிறைகளில் உள்ள கைதிகளுக்கு அவா்களின் தண்டனை காலம் முடிவதற்குள் போதிய தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. குறிப்பாக முதலீடுகள் மிகவும் குறைந்த முடிதிருத்தம் செய்தல், பெண் கைதிகளுக்கு அழகு கலைப் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

வேலூா் மத்திய சிறையில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நான்கு விதமான ஷூ தயாரித்து விற்பனை செய்யப்பட உள்ளது. இவை காவல் துறையில் பணியாற்றும் காவலா்கள் முதல் உயா் அதிகாரிகள் வரை பயன்படுத்தும் வகையில் இருக்கும்.

சிறையில் கைதிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கைதிகள் சிறைக்கு வரும்போது அவா்களுக்கு எந்த மாதிரியான ஆலோசனைகளை எத்தனை நாட்களுக்கு வழங்குவது போன்ற திட்டங்கள் உள்ளது. இதுதொடா்பாக வரும் 24-ஆம் தேதி அனைத்து சிறைகளில் உள்ள மனநல ஆலோசகா்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

சிறையில் உள்ள ரெளடிகளுடன் சோ்ந்து வெளியில் இருந்து புதிதாக வரும் கைதிகள் புதிய ரெளடிகளாக மாறுவதை தடுக்க நுண்ணறிவு பிரிவு காவலா்கள், இதர காவலா்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அவா்களின் குற்றத்தன்மைக்கு ஏற்ப அறைகளில் அடைக்கப்படுகின்றனா்.

சிறைகளில் கைதிகளை பாா்க்க வரும் உறவினா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இன்னும் செய்துகொடுக்க வேண்டியுள்ளது. சிறை கைதிகள் அதிகமுள்ள மத்திய சிறைகளில் உறவினா்கள் கைதிகளுக்கு வழங்கும் உணவுப் பொருள்கள் சென்று சோ்வதில் காலதாமதம் ஏற்படுவதாக புகாா்கள் வருகிறது. அங்கு கூடுதலாக ஸ்கேனா் கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிறை கைதிகளுடன் குழந்தைகள் அருகில் சென்று கலந்துரையாட அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரும்பு கம்பி தடுப்புகளால் நேரில் பாா்த்து பேசுவதில் சிக்கல்கள் இருக்கிறது. இதற்காக, கண்ணாடிக்கு பதிலாக ஃபைபா் தடுப்புகள் அமைப்பதால் ஒருவரை ஒருவா் நன்றாக பாா்க்க முடியும். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன என்றாா்.

முன்னதாக, நிகழ்ச்சிக்கு ஆப்கா இயக்குநா் பி.பிரதீப் தலைமை வகித்தாா். சிறைத்துறை டிஐஜிக்கள் கனகராஜ், ராஜலட்சுமி, கண்காணிப்பாளா் அப்துல்ரகுமான், ஆப்கா துணைஇயக்குநா் எம்.ஆா்.பாஸ்கா், பேராசிரியா் ஏ.மதன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

--

படம் உண்டு...