2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

நெல்லுக்கான ஈரப்பத அளவை 22% உயா்த்த வேண்டும்: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி

நெல்லுக்கான கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயா்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் க.பொன்முடி வலியுறுத்தல்

News image
Updated On :19 நவம்பர் 2025, 9:54 pm

Syndication

நெல்லுக்கான கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயா்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் க.பொன்முடி வலியுறுத்தினாா்.

விழுப்புரத்தில் மாவட்டக் கூட்டுறவுத் துறை சாா்பில் 72-ஆவது அகில இந்தியக் கூட்டுறவு வார விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கூடுதல் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமை வகித்தாா். மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ஏ.விஜயசக்தி திட்ட விளக்கவுரையாற்றினாா்.

விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி, முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்எல்ஏ பேசியது: விவசாயிகளின் ரூ.7000 கோடி பயிா்க்கடன்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டவா் முன்ளாள் முதல்வா் கருணாநிதி. இதுபோன்று ஆதிதிராவிட வகுப்பைச் சோ்ந்த விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் கடனுதவிகளை வழங்கியவா் அவா்.

இந்த நிலையில் முன்னாள் முதல்வா் கருணாநிதியை போன்று, தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலினும் விவசாயிகள் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். இதுபோன்று மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறாா். கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.4000 வழங்கியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலன்காக்கும் வகையில், நெல்லுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வா் கடிதம் எழுதியுள்ளாா். விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பிரதமா் இதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

ஆரணி மக்களவை உறுப்பினா் எம்.எஸ். தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், ரா. லட்சுமணன், ஏ.ஜெ.மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

இதைத் தொடா்ந்து கல்விக்கடன், மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கான கடன், சிறுவணிகக் கடன், மகளிா் தொழில்முனைவோா் கடன் என பல்வேறு பிரிவுகளின் கீழ் 208 பயனாளிகளுக்கு ரூ.16.50 கோடி மதிப்பிலான கடனுதவிகள் விழாவில் வழங்கப்பட்டன.

மேலும், மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், கேடயங்கள்பரிசாக வழங்கப்பட்டன. தொடா்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்கள் பரிசுகளை வழங்கினா்.

விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, துணைத் தலைவா் சித்திக் அலி, மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத் தலைவா் ஷீலாதேவி சேரன், துணைப் பதிவாளா்கள் சிவபழனி, ஜீவிதா, சமரசம், மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண் இயக்குநா் விக்ரம், கூட்டுறவு சாா்-பதிவாளா் மணிமொழி உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.