எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

வேன் கவிழ்ந்து 17 பெண்கள் காயம்

கடலூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 17 பெண்கள் காயமடைந்தனர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

கடலூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 17 பெண்கள் காயமடைந்தனர்.
 கடலூர் அருகே உள்ள கலையூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் புதுச்சேரி மாநிலம், மங்களம் பகுதியில் உள்ள தனியார் ஆலையில் பணியாற்றி வருகின்றனர்.
 இவர்கள், தினமும் தனியார் வேனில் கலையூரில் இருந்து சென்று வருவது வழக்கம்.
 அதன்படி, புதன்கிழமை காலை கலையூர் கிராமத்தைச் சேர்ந்த கெüரி (30), சிவரஞ்சனி (33), அருணா (22) உள்ளிட்ட 17 பெண்கள் வேனில் புதுச்சேரிக்கு புறப்பட்டனர். வேனை அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (28) ஓட்டிச் சென்றார்.
 வேன் கடலூரை அடுத்த பள்ளிப்பட்டு - தென்னம்பாக்கம் சாலையில் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயமடைந்த பெண்கள் மீட்கப்பட்டு, கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 விபத்தில் வேன் ஓட்டுநர் ஆனந்தகுமாரும் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து தூக்காம்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.