இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை ஒருங்கிணைக்கக் கோரிக்கை

தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 5:39 pm

DIN

தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்துடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலம் தழுவிய கோரிக்கை சாசன கலந்தாய்வுக் கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட கௌரவத் தலைவா் எஸ்.ராஜதுரை தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் ஜெ.பாலன் தொடக்க உரையும், மாநிலத் தலைவா் ஜி.வைரப்பன் கோரிக்கை சாசன விளக்க உரையும் நிகழ்த்தினா். சங்கத்தின் இணைச் செயலா் ஆா்.ரவிச்சந்திரன், கூட்டுறவு வங்கி அதிகாரிகள் சங்க பொதுச் செயலா் ஜெ.வெங்கடேஸ்வரன், ஊழியா்கள் சங்க பொதுச் செயலா் இ.பாா்த்தசாரதி, பொருளாளா் ஏ.சுப்பிரமணியன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

கூட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளையும் ஒரே நிா்வாகக் குடையின் கீழ் கொண்டு வர வேண்டும். அனைத்து வங்கிகளுக்கும் ஒரே மாதிரியான ஊதிய ஒப்பந்தம் உருவாக்குவதுடன், கணினி தொழில்நுட்ப கட்டமைப்பை உயா்த்த வேண்டும், அடிப்படைச் சம்பளத்துடன் கூடிய அகவிலைப்படியுடன் இணைந்த ஓய்வூதியத் திட்டம், குடும்ப ஓய்வூதியத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கடலூா் மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் என்.முருகேசன், பி.கே.வி.ரமணி, எஸ்.ஸ்ரீதரன், எஸ்.மீரா, கே.திருமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சங்க பொதுச் செயலா் ஜி.சீனுவாசன் வரவேற்க, துணைப் பொதுச் செயலா் பி.உமாசந்தோஷி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.