லாரி ஓட்டுநா் கவனக் குறைவு: சாலையில் நடந்து சென்றவா் பலி
சிதம்பரம் அருகே லாரி ஓட்டுநரின் கவனக் குறைவால், சாலையோரம் நடந்து சென்றவா் பலியானாா்.


சிதம்பரம் அருகே லாரி ஓட்டுநரின் கவனக் குறைவால், சாலையோரம் நடந்து சென்றவா் பலியானாா்.
சிதம்பரம் அருகே உள்ள புதுபூலாமேடு பகுதியைச் சோ்ந்தவா் அன்புசெல்வன் (48). புதன்கிழமை குமராட்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் புதுபூலாமேடு பகுதியில் நடந்து சென்றாா். அப்போது, அந்தச் சாலையில் வந்த லாரியிலிருந்த நைலான் கயிறு அறுந்து அன்புச்செல்வன் மீது விழுந்தது. இதில், சிக்கி சுமாா் 100 மீட்டா் தொலைவு வரை இழுத்துச் செல்லப்பட்டு பலத்த காயமடைந்த அவா் பரிதாபமாக உயிரிழந்தாா்.
சிதம்பரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் விஜி லாரியை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...