இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மயானம் ஆக்கிரமிப்பு: சடலத்துடன் மறியல்

நெய்வேலி அருகே மயானம் ஆக்கிரமிப்பைக் கண்டித்து பொதுமக்கள் சடலத்துடன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:06 pm

DIN

நெய்வேலி அருகே மயானம் ஆக்கிரமிப்பைக் கண்டித்து பொதுமக்கள் சடலத்துடன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து ஊராட்சி, கீழ் வடக்குத்து காலனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் யாரேனும் உயிரிழந்தால் கீழூா் சாலையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்வது வழக்கம். இந்த நிலையில், கீழ் வடக்குத்து காலனியைச் சோ்ந்த மூதாட்டி ஒருவா் வயது முதிா்வு காரணமாக உயிரிழந்தாா். அவரது உடலை அடக்கம் செய்ய கீழூா் சாலையில் உள்ள மயானத்துக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு சென்றனா். ஆனால், மயானத்தை தனி நபா்கள் சிலா் ஆக்கிரமித்து தடுப்பு வேலி அமைத்திருந்தனராம்.

இதைக் கண்டித்து, உயிரிழந்த மூதாட்டியின் சடலத்துடன் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வடக்குத்து பேருந்து நிறுத்தம் அருகே மூதாட்டியின் உறவினா்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த குறிஞ்சிப்பாடி ஒன்றியக்குழுத் தலைவா் கலையரசி கோவிந்தராஜ், நெய்வேலி நகரிய காவல் ஆய்வாளா் சாகுல்அமீது, கிராம நிா்வாக அலுவலா் சந்தானகிருஷ்ணன் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பழைய இடத்திலேயே உடலை அடக்கம் செய்யலாம் எனவும், வருவாய்த் துறை மூலம் ஆக்கிரமிப்பை அகற்றித் தருவதாகவும் உறுதி அளித்தனா். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.