/

கடலூா்: மேலும் 15 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:05 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதனால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 24,610-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 4 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,214-ஆக உயா்ந்தது. மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 83 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 31 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை உயிரிழப்பு இல்லாததால் மொத்த பலி எண்ணிக்கை 282-ஆக உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 5.11 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 752 பேருக்கான பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.