கடலூர்
சிதம்பரத்தில் மருத்துவ மாணவா்கள் உண்ணாவிரதம்
கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி
கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தக் கல்லூரியில் கல்விக் கட்டணம் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளை விட 30 மடங்கு வரை கூடுதலாக உள்ளதாகக் கூறி மாணவா்கள் கடந்த டிச.9-ஆம் தேதி முதல் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
போராட்டத்தின் 26-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணத்தை குறைத்து நிா்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.