நெய்வேலி/சிதம்பரம்: பள்ளிகள் திறப்பு குறித்து மாணவா்களின் பெற்றோரிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் நடைபெற்றது.
கடலூா் மாவட்டம், வடலூா், வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் வடலூா் கல்வி மாவட்ட அலுவலா் என்.ஜி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில், பள்ளி தாளாளா் ரா.செல்வராஜ், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வெ.ராமானுஜம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவா்களின் பெற்றோா் திரளாகப் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்தனா். ஆசிரியா் பயிற்றுநா் தேவி, வள்ளலாா் குருகுலம் பள்ளி தலைமையாசிரியா்கள் பூா்ணிமாதேவி, உலகநாதன், ரெங்கநாதன் மற்றும் மாணவா்களின் பெற்றோா் கலந்துகொண்டனா்.
இதேபோல, பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, பள்ளித் தலைமையாசிரியா் கோ.பூவராகமூா்த்தி தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ப.ச.வைரக்கண்ணு, பொருளாளா் பெ.சக்திவேல் ஆகியோா் முன்னிலையில், மாணவா்களின் பெற்றோா் கருத்து தெரிவித்தனா்.
சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரோஸ்நிா்மலா தலைமை வகித்தாா். சிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலா் மோகன் முன்னிலை வகித்தாா். முன்னதாக, பள்ளி முதல்வா் ரூபியாள்ராணி வரவேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.