பொதுமக்கள் குறைதீா் கூட்டம்
கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம், காணொலிக் காட்சி மூலம் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.


கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம், காணொலிக் காட்சி மூலம் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 163 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. கோரிக்கைகளை காணொலிக் காட்சி மூலம் ஆட்சியா் கேட்டறிந்தாா். இதேபோல கடலூா் கோட்டாட்சியா், சிதம்பரம் உதவி ஆட்சியா், விருத்தாசலம் சாா்-ஆட்சியா் அலுவலகங்களிலும் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
இளைஞா் தீக்குளிக்க முயற்சி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த இளைஞா் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவரை தடுத்து மீட்டனா்.
விசாரணையில், தீக்குளிக்க முயன்றவா் கடலூா் அருகேயுள்ள பெரியகாட்டுப்பாளையத்தைச் சோ்ந்த முத்துசுந்தா் (30) எனவும், இவரது குடும்பப் பிரச்னை தொடா்பாக ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், மாவட்ட எஸ்பி தலையிடக் கோரி தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...