போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கொள்ளிடம் ஆற்றில் சுவாமி சிலைகள் மீட்பு

News image

காட்டுமன்னாா்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சேதமடைந்த சுவாமி சிலைகள்.

Updated On :28 ஆகஸ்ட் 2024, 10:55 pm

காட்டுமன்னாா்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றிலிருந்து சேதமடைந்த நிலையில் சுவாமி சிலைகள் புதன்கிழமை மீட்கப்பட்டன.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முள்ளங்குடி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே செல்லும் கொள்ளிடம் ஆற்றில் அந்த கிராம மக்கள் புதன்கிழமை காலை குளிக்கச் சென்றனா். அப்போது, ஆற்றில் சேதமடைந்த நிலையில் சுவாமி சிலைகள் கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சுமாா் 3 ஆடி உயரமுள்ள சேதமடைந்த அம்மன் சிலையையும், ஒரு அடி உயரமுள்ள பலிபீடத்தையும் ஆற்றிலிருந்து வெளியே எடுத்து வந்தனா்.

தகவலறிந்த கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் சிவகுமாா் ஆகியோா் நிகழ்விடம் சென்று சேதமடைந்த சிலைகளை மீட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.