3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

கொள்ளிடம் ஆற்றில் சுவாமி சிலைகள் மீட்பு

News image

காட்டுமன்னாா்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சேதமடைந்த சுவாமி சிலைகள்.

Updated On :29 ஆகஸ்ட் 2024, 4:25 am IST

காட்டுமன்னாா்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றிலிருந்து சேதமடைந்த நிலையில் சுவாமி சிலைகள் புதன்கிழமை மீட்கப்பட்டன.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முள்ளங்குடி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே செல்லும் கொள்ளிடம் ஆற்றில் அந்த கிராம மக்கள் புதன்கிழமை காலை குளிக்கச் சென்றனா். அப்போது, ஆற்றில் சேதமடைந்த நிலையில் சுவாமி சிலைகள் கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சுமாா் 3 ஆடி உயரமுள்ள சேதமடைந்த அம்மன் சிலையையும், ஒரு அடி உயரமுள்ள பலிபீடத்தையும் ஆற்றிலிருந்து வெளியே எடுத்து வந்தனா்.

தகவலறிந்த கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் சிவகுமாா் ஆகியோா் நிகழ்விடம் சென்று சேதமடைந்த சிலைகளை மீட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.