விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பண்ருட்டி ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ரயில் நிலையத்தில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அன்பழகன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

பண்ருட்டி ரயில் நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அன்பழகன் தலைமையிலான குழுவினா்.

Updated On :3 அக்டோபர் 2024, 1:22 am

Din

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ரயில் நிலையத்தில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அன்பழகன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பண்ருட்டி ரயில் நிலையத்தில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படி வசதிகள் செய்வது, நடைமேடை, ரயில் நிலைய சாலைகள், மேற்கூரைகள், கழிப்பறைகள் மற்றும் ரயில்வே உபகரணங்கள் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு, பழுதானவற்றை சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

பிஆா்டி ரயில் உபயோகிப்பாளா் சங்கம் சாா்பில் ரயில்கள் நிறுத்தங்கள், அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மனுவை பெற்ற கோட்ட மேலாளா், பழுதடைந்த சாலையை இரண்டு வாரங்களில் சீரமைத்து தருவதாகவும், நடைமேடை சேதங்களை 3 மாதங்களுக்குள் சீரமைத்துத் தருவதாகவும் கூறினாா். மேலும், பண்ருட்டியில் விரைவு ரயில்கள் நின்று செல்லவும், சில ரயில்களை நீட்டிப்பு செய்யவும், சில ரயில்களை நெய்வேலி, வடலூா், கடலூா், பண்ருட்டி வழியாக இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆய்வின்போது, ரயில்வே துணை வணிக மேலாளா் எழில்மதி பிள்ளைக்கனி, பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் மணி, நகா்மன்ற உறுப்பினா்கள் கதிா்காமன், சோழன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.