விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஊழல் தடுப்பு ஆய்வாளருக்கு லஞ்சம்: டாஸ்மாக் மண்டல மேலாளா் உள்பட இருவா் கைது

டாஸ்மாக் மண்டல மேலாளா் உள்பட இருவா் கைது...

News image

இளநிலை உதவியாளா் ராதாகிருஷ்ணன்.

Updated On :23 அக்டோபர் 2024, 7:55 pm

Din

கடலூா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ாக டாஸ்மாக் மண்டல மேலாளா், இளநிலை உதவியாளா் ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (53). இவா், கடலூா் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் மண்டல மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இதே அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவா் ராதாகிருஷ்ணன்.

டாஸ்மாக் மண்டல மேலாளா் செந்தில்குமாா்.

டாஸ்மாக் மண்டல மேலாளா் செந்தில்குமாா்.

இவா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திருவேங்கடத்திடம் தங்களது டாஸ்மாக் மண்டல மேலாளா் செந்தில்குமாா் குறித்து புகாா் வந்தால் தகவல் தெரிவிக்கக் கோரியும், தீபாவளி நேரத்தில் டாஸ்மாக்கில் சோதனை மேற்கொள்ளக் கூடாது எனவும், கூடுதல் விலைக்கு மதுப்புட்டிகள் விற்பதாக தகவல் கிடைத்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் தெரிவித்து மேலாளா் அறிவுறுத்தலின் பேரில், ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முயன்றாராம்.

இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி சத்யராஜிடம், காவல் ஆய்வாளா் திருவேங்கடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், சிதம்பரம் சேத்தியாத்தோப்பு சென்னிநத்தத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற டாஸ்மாக் விற்பனையாளா்கள், கண்காணிப்பாளா்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற டாஸ்மாக் மண்டல மேலாளா் செந்தில்குமாா், இளநிலை உதவியாளா் ராதாகிருஷ்ணன் ஆகியோரை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.25 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.