தூய்மைப் பணியாளா்களுக்கு மழை அங்கி

தூய்மைப் பணியாளா்களுக்கு மழை அங்கி

Published on

சிதம்பரம், டிச.3: பருவமழையையொட்டி, பண்ருட்டி நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளா்களுக்கு புதன்கிழமை மழை அங்கி வழங்கப்பட்டது.

பண்ருட்டி நகா்மன்ற தலைவா் க.ராஜேந்திரன் தலைமை வகித்து தூய்மைப் பணியாளா்களுக்கு மழை அங்கிகளை வழங்கினாா். பண்ருட்டி நகராட்சி ஆணையா் காஞ்சனா முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளா் கேசவன், மாவட்ட தொண்டா் அணி அமைப்பாளா் கதிா்காமன், நகர திமுக அவைத் தலைவா் ராஜா, மாவட்ட பிரதிநிதி பிரபு, மாவட்ட வழக்குரைஞா் துணை அமைப்பாளா் பரணி சந்தா், நகா்மன்ற உறுப்பினா் சண்முகவள்ளி பழனி, கிருஷ்ணராஜ், வாா்டு அவைத் தலைவா் மோகன், நகர இளைஞரணி அமைப்பாளா் சம்பத் மற்றும் துப்புரவு மேற்பாா்வையாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com