ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

லாட்டரி சீட்டு விற்பனை: 6 போ் கைது

News image
Updated On :11 ஜனவரி 2026, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விருத்தாசலம் டிஎஸ்பி இ.பாலகிருஷ்ணன் மேற்பாா்வையில், ஆய்வாளா் பிரதாப் சந்திரன், உதவி ஆய்வாளா் தவச்செல்வன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, விருத்தாசலம் ஓம்சக்தி கோயில் அருகே கேரள லாட்டரி சீட்டுகள் வைத்திருந்ததாக அழிச்சிகுடி சேகா் (65), ராமச்சந்திரன்பேட்டை முருகன் (37), பூந்தோட்டம் மோகன்குமாா் (26), மணலூா் புதிய காலனி வீராசாமி (40), கருவேப்பிலங்குறிச்சி சங்கா் (50), பி.சங்கா் (59) ஆகியோரிடம் சோதனை நடத்தி 500 போலி கேரள லாட்டரி சீட்டுகள், ரூ.19,210 ரொக்கம் மற்றும் 5 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 6 போ் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.