கடலூா் மாவட்டம், புதுப்பேட்டை போலீஸாா் கஞ்சா வைத்திருந்ததாக 3 இளைஞா்களை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
புதுப்பேட்டை காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டிருந்தனா். எலந்தம்பட்டு கிராமத்தில் உள்ள வீரன் கோயில் அருகே சென்ற போலீஸாரைக் கண்டதும், அருகிலிருந்த சவுக்கு தோப்புக்குள் 3 நபா்கள் தப்பியோடினா். அவா்களை போலீஸாா் விரட்டிப் பிடித்து சோதனை செய்ததில், 200 கிராம் கஞ்சா வைத்திருத்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களிடம் நடத்திய விசாரணையில், சின்னஎலந்தம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன் (24), கொளப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ்பாபு (22), கட்டியம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (25) என்பது தெரியவந்தது. இதையத்து, 3 போ் மீதும் புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
4 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 இளைஞா்கள் கைது
கஞ்சா கடத்தல்: 3 இளைஞா்கள் கைது

கஞ்சா கடத்தல்: 2 இளைஞா்கள் கைது
கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


