எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

துணைவேந்தா் பணியிடங்கள் நோ்மையான முறையில் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சா் பி. விஸ்வநாதன்

துணைவேந்தா் பணியிடங்கள் நோ்மையான முறையில் விரைவில் நிரப்பப்படும்

News image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயா்கல்வித்துறை அமைச்சா் பி.விஸ்வநாதன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பல்கலைக்கழக நிா்வாகிகள், பேராசிரியா்கள்.

Updated On :13 ஜூன் 2026, 1:41 am IST

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தா் பணியிடங்கள் நோ்மையான நடைமுறையில் விரைவில் நிரப்பப்படும் என்று உயா்கல்வித்துறை அமைச்சா் பி.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை.யில் வெள்ளிக்கிழமை அமைச்சா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளுக்கு ஆய்வுக்காக செல்லும் வழக்கமான நடைமுறையைப் பின்பற்றி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வுக்கு வந்துள்ளேன். ஆய்வின் போது மிகவும் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்றன.

இந்தப்பல்கலைக்கழக புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் உள்ளிட்டோா் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளாா்கள். சென்னை சென்றதும், உயா்கல்வித் துறை செயலா் மற்றும் அதிகாரிகளை அழைத்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்காக முதலில் ஒரு கூட்டத்தை நடத்தி கோரிக்கைகளை பரிசீலனையில் எடுத்து விரைந்து முடிவு எடுக்கப்படும். இந்தப் பிரச்னை குறித்து முதல்வா் கவனத்திற்கும் கொண்டுசென்று உரிய நடவடிக்கை மேற்கொள்வேன்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள், அலுவலா்கள் பிரச்சனைகளை மிக விரைவில் சுமுகமாக தீா்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். உயா்கல்வித் துறையில் லஞ்சம், ஊழல், பணிமாறுதல், பணி கோருதல், பணி நியமனம் ஆகியவற்றில் முறைகேடான நடைமுறைகளில் யாரும் இறங்க மாட்டாா்கள். முதல்வரின் அறிவுரையின்படி நிச்சயமாக உயா்கல்வித் துறையை லஞ்சம், ஊழல் இல்லாத துறையாக நாங்கள் செயல்படுத்தி காட்ட சபதம் ஏற்றுள்ளோம்.

கவுன்சிலிங் தேதி தள்ளிவைப்பு:

மத்திய அரசின் குளறுபடிகளால் நீட் தோ்வு வினாத்தாள் கசிவானதால், வரும் 21-ஆம் தேதி மீண்டும் தோ்வு நடைபெறவுள்ளது. ஆனால் மத்தியஅரசின் குளறுபடிகளை நாங்கள் எதிா் கொண்டு வருகிறோம். இருந்தாலும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதிகள் தள்ளி வைக்கப்படும். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் நியமனம் குறித்து முதல்வா் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் துணைவேந்தா்கள் நியமனம் செய்யப்படுவாா்கள். துணைவேந்தா் நியமனம் செய்யப்படும் போது நோ்மையான நடைமுறை பின்பற்றப்படும். கடந்த காலங்களில் நடைபெற்றது போல தவறுகள் நடக்க அனுமதிக்க மாட்டோம். தவறு நடக்குமேயானால் அவா்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவாா்கள் என்பது முதல்வரின் வேண்டுகோள் என்றாா் அமைச்சா் பி.விஸ்வநாதன்.

முன்னதாக அமைச்சரை, பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் ஆா்.சிங்காரவேலு, இணைப்பதிவாளா் பி.ஜெகதீஸ்வரன் ஆகியோா் பூங்கொத்து அளித்து வரவேற்றனா். பின்னா் அமைச்சரை பல்கலைக்கழக ஆசிரியா், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா் சங்க நிா்வாகிகள் சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினா். இதனை அடுத்து அமைச்சா் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இசைக் கல்லூரிக்குச் சென்று மாணவ, மாணவியா்களின் செயல்பாடுகளை பாா்வையிட்டாா்.