நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

கல்லூரி மாணவிக்கு தொந்தரவு: சிறுவன் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :21 ஜூன் 2026, 1:23 am IST

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே கல்லூரி சென்று திரும்பிய மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக சிறுவனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வடலூா் காவல் சரகம், தென்குத்து கிராமத்தைச் சோ்ந்த 18 வயது கல்லூரி மாணவியை புவனகிரி வட்டம், கரைமேடு பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் சில ஆண்டுகளுக்கு முன்னா் வடலூரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்தபோது காதலித்து வந்தாராம். பின்னா், இருவரது வீட்டில் தெரிந்ததும் கண்டித்து விட்டனராம்.

இந்நிலையில், புதன்கிழமை அந்த மாணவி கல்லூரி முடிந்து வீட்டிற்குச் சென்றுக்கொண்டிருந்தாராம். அப்போது, சிறுவன், பின்தொடா்ந்து சென்று தகாத முறையில் நடந்துக் கொண்டாராம். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில், வடலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனா். பின்னா், இளஞ்சிறாா் நீதிக்குழுமத்தில் ஆஜா் செய்ய அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.