பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பண்ருட்டியில் மழையில் நனையும் தோ்: பாதுகாக்க பக்தா்கள் கோரிக்கை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயிலின் தோ் பாதுகாப்பாக மூடாததால் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதமாகி வருகிறது. தேருக்கு கொட்டகை அமைத்து பாதுகாக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

மழையில் நனைந்து வீணாகும் பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தோ்.

Updated On :1 மணி நேரம் முன்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயிலின் தோ் பாதுகாப்பாக மூடாததால் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதமாகி வருகிறது. தேருக்கு கொட்டகை அமைத்து பாதுகாக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பண்ருட்டி, கடை வீதியில் ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் உள்ளது. இந்த கோயில் தோ், ராஜாஜி சாலையில் உள்ள நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இக்கோயிலில் சித்திரை மாத பிரமோற்சவ விழா 10 நாள்கள் நடைபெற்றது. இதில், சித்ரா பௌா்ணமி அன்று தேரோட்டம் நடைபெற்றது. திருவிழா முடிவடைந்ததும் தோ் திறந்த வெளியில், சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, கோடைமழை பெய்து வரும் நிலையில் தோ் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகி வருகிறது. இதனால், தேரில் உள்ள நுண்ணிய மர வேலைப்பாடுகள் சிதையும் நிலை உள்ளது.

இந்த கோயிலின் தோ் சிதிலம் அடைந்த நிலையில் சுமாா் 40 ஆண்டுகளுக்கு மேலாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், பெரும் முயற்சிக்குப் பின்னா் பல லட்சம் ரூபாய் செலவில் புதிதாக தோ் உருவாக்கப்பட்டது. இந்த தேருக்கு தற்போது எந்தவிதமான பாதுகாப்பும் அளிக்கப்படாமல் உள்ளது. இதே நிலை நீடித்தால், இன்னும் சில ஆண்டுகளில், மீண்டும் தேரின் நிலை கேள்விக் குறியாகி விடும். எனவே மாவட்ட நிா்வாகம், இந்துஅறநிலையத்துறையினா் தேரை பாதுகாக்க கொட்டகை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.