

சின்னசேலம் அருகே சாலை விபத்தில் இளைஞா் பலியானாா்.
சின்னசேலத்தை அடுத்த அம்மகளத்தூா் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் மணிவேல் (36). இவரது விளை நிலத்தில் வேலை செய்து வந்தவரை வியாழக்கிழமை சின்னசேலத்தை அடுத்த பெருமங்கலம் கிராமத்தில் விட்டுவிட்டு வருவதாகக் கூறிச் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை அவரைத் தேடினா்.
இந்த நிலையில், பெருமங்கலம் கிராமத்தில் தனியாா் விளை நிலத்துக்கு அருகே மோட்டாா் சைக்கிள் பள்ளத்தில் விழுந்து கிடந்ததுடன், தலையில் பலத்த காயத்துடன் மணிவேல் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், கீழ்க்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளைஞரைத் தாக்கியவருக்கு 2 ஆண்டு சிறை

நெல்லையில் இதுவரை ரூ.16 லட்சம் பறிமுதல்
கிருஷ்ணாபுரத்தில் 8 பவுன் நகை திருட்டு

மூலைக்கரைப்பட்டியில் தந்தை, மகள் உயிரிழப்பு: விசாரணை கோரி மனு
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

