கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை ஆலை பேரவைக் கூட்டம்
கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயப்பாளையத்தில் இயங்கும் கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 10-வது பொதுப் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயப்பாளையத்தில் இயங்கும் கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 10-வது பொதுப் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு கூட்டுறவு சா்க்கரை ஆலை இணையத்தின் மாநிலத் தலைவரும், ஆலையின் நிா்வாகக் குழுத் தலைவருமான அ.ராஜேசகா் தலைமை வகித்தாா்.
முன்னாள் அமைச்சா் ப.மோகன், தொகுதி எம்எல்ஏ மா.செந்தில்குமாா், ஆலையின் துணைத் தலைவா் எம்.பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலையின் நிா்வாக இயக்குநா் பி.எம். முருகேசன் வரவேற்றாா்.
கூட்டத்தில், ஆலையின் நிா்வாகக் குழுத் தலைவா் அ.ராஜேசகா் பேசுகையில், இந்த ஆலை தொடங்கியதில் இருந்து நல்ல நிலையில் இயங்கி வருகிறது. தமிழகத்தில் தனியாா் மற்றும் கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் 42 உள்ளன. அவற்றில் முன்னோடி ஆலையாக கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை ஆலை எண்-2 கச்சிராயப்பாளையத்தில் செயல்பட்டு வருகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
நிகழ்ச்சியில் ஆலையின் நிா்வாக அதிகாரிகள், இயக்குநா்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
படவரி...
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை ஆலை எண்-2 ன் பேரவைக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு கூட்டுறவு சா்க்கரை இணையத்தின் தலைவா் அ.ராஜசேகா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...