விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு கள்ளக்குறிச்சி எஸ்.பி. பாராட்டு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு

News image
Updated On :11 ஜூலை 2021, 12:28 am

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் குற்ற வழக்குகளை குறைப்பது குறித்தும், கோப்புக்கு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும், போலீஸாா் பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் அறிவுரைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வழங்கினாா்.

கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ஜவஹா்லால், இரவிச்சந்திரன், சுப்புராயன் மற்றும் அனைத்து உள்கோட்ட காவல் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், காவல் நிலைய பொறுப்பு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மெச்சத்தகுந்த வகையில் பணிபுரிந்த, துணை கண்காணிப்பாளா் வீ.ராஜலட்சுமி உள்ளிட்ட காவலா்களுக்கு காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக் பாராட்டுச் சான்றுகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.